TNPSC - GENERAL TAMIL - PART B - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- சங்கம் மருவிய கால இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும்.
- இதனை நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும்அழைக்கப்படுகிறது.
- பதினெண்கீழ்க்கணக்கு என்ற வழக்கை கொண்டுவந்தவர்கள் = மயிலைநாதர், பேராசிரியர்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது = பன்னிரு பாட்டியல்
அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்
- பன்னிரு பாட்டியல் |
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்ன என்பதை கூறும் பாட்டு
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு
|
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் = 11 (நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது,இனியவை நாற்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி)
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்கள் = 6 (கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது,திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை)
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல் = 1 (களவழி நாற்பது)
- நீதி நூல்களுள் சிறியது = இன்னா நாற்பது
- நீதி நூல்களுள் பெரியது = திருக்குறள்
- அகநூல்களுள் சிறியது = கார் நாற்பது
- அகநூல்களுள் பெரியது = திணைமாலை நூற்றைம்பது
- இரட்டை அறநூல்கள் = இன்னா நாற்பது, இனியவை நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை:
எண்
|
நூல்
|
பொருள்
|
பாடல்
|
ஆசிரியர்
|
1
|
நாலடியார்
|
அறம்
|
400
|
சமண முனிவர்கள்
|
2
|
நான்மணிக்கடிகை
|
அறம்
|
106
|
விளம்பிநாகனார்
|
3
|
இன்னா நாற்பது
|
அறம்
|
40
|
கபிலர்
|
4
|
இனியவை நாற்பது
|
அறம்
|
40
|
பூதஞ்சேந்தனார்
|
5
|
திருக்குறள்
|
அறம்
|
1330
|
திருவள்ளுவர்
|
6
|
திரிகடுகம்
|
அறம்
|
100
|
நல்லாதனார்
|
7
|
ஆசாரக்கோவை
|
அறம்
|
100
|
பெருவாயில் முள்ளியார்
|
8
|
பழமொழி நானூறு
|
அறம்
|
400
|
முன்றுறை அரையனார்
|
9
|
சிறுபஞ்சமூலம்
|
அறம்
|
102
|
காரியாசான்
|
10
|
முதுமொழிக் காஞ்சி
|
அறம்
|
100
|
கூடலூர் கிழார்
|
11
|
ஏலாதி
|
அறம்
|
80
|
கணிமேதாவியார்
|
12
|
கார் நாற்பது
|
அகம்
|
40
|
கண்ணன் கூத்தனார்
|
13
|
ஐந்திணை ஐம்பது
|
அகம்
|
50
|
மாறன் பொறையனார்
|
14
|
ஐந்திணை எழுபது
|
அகம்
|
70
|
மூவாதியார்
|
15
|
திணைமொழி ஐம்பது
|
அகம்
|
50
|
கண்ணன் சேந்தனார்
|
16
|
திணைமாலை நூற்றைம்பது
|
அகம்
|
150
|
கணிமேதாவியார்
|
17
|
கைந்நிலை
|
அகம்
|
60
|
புல்லாங்காடனார்
|
18
|
களவழி நாற்பது
|
புறம்
|
40
|
பொய்கையார்
|
18
|
இன்னிலை
|
புரம்
|
45
|
பொய்கையார்
|
நாலடியார்
நாலடியாரின் உருவம்:
- ஆசிரியர்= சமண முனிவர்கள்
- தொகுத்தவர் = பதுமனார்
- பாடல்கள் = 400
- பொருள் = அறம்
- பா வகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும்அழைக்கப்படுகிறது
வேறு பெயர்கள்:
- நாலடி
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
- திருக்குறளின் விளக்கம்
நூல் பகுப்பு:
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
- அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
- பொருட்பால் = 24 அதிகாரங்கள்
- இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்
நூலின் சிறப்பு:
- முப்பெரும் அற நூல்கள் = 1) திருக்குறள் 2)நாலடியார் 3)பழமொழி நானூறு
- இந்நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- நூலின் பெருமையை கூறும் அடிகள்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
|
பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்
|
பொதுவான குறிப்புகள்:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
- நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
- நூலை தொகுத்தவர் = பதுமனார்
- நூலை முப்பாலாக பகுத்தவர் = தருமர்
- நூலிற்கு உரை கண்டவர் = தருமர், பதுமனார்
- முத்தரையர் பற்றி கூறுகிறது இந்நூல்
- நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
முக்கிய அடிகள்:
- கல்வி கரையில; கற்பவர் நாள்சில
- ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப் பால்உண் குருகின் தெரிந்து
- கல்வி அழகே அழகு
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகையின் உருவம்:
- ஆசிரியர் = விளம்பி நாகனார்
- ஊர் =விளம்பி
- பாடல்கள் = 2 + 104
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
- கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதிமணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
கடவுள் வாழ்த்து:
- முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.
பொதுவான குறிப்புகள்:
- ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
- நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
- இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- ஜி.யு.போப் இந்நூலின் 7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
முக்கிய அடிகள்:
- யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
- இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
- தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
- இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
- வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
- ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
- கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
- மனைக்கு விளக்கம் மடவாள் மடவாளுக்கு விளக்கம் புதல்வர் புதல்வர்க்கு விளக்கம் கல்வி கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு
இன்னா நாற்பது
இன்னா நாற்பதின் உருவம்:
- ஆசிரியர் = கபிலர்
- பாடல்கள் = 1 + 40
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பதுஎனப்படுகிறது.
கடவுள் வாழ்த்து:
- கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமைதுன்பம் எனக் கூறுகிறார்.
பொதுவான குறிப்புகள்:
- இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
- இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- கபிலரிடம் சைவவைணவ பேதம் இல்லை.
- சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.
- இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.
ஐந்து கபிலர்:
- பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்
- இன்னா நாற்பது பாடிய கபிலர்
- பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்
- பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்
- அகவற்பா பாடிய கபிலர்.
முக்கிய அடிகள்:
- உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா
- தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
- ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா
- குழவிகள் உற்றபிணி இன்னா
- இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு
இனியவை நாற்பது
இனியவை நாற்பதின் உருவம்:
- ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
- பாடல்கள் = 1 + 40
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
கடவுள் வாழ்த்து:
- சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
பொதுவான் குறிப்புகள்:
- இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
- பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
முக்கிய அடிகள்:
- ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
- ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
- வருவாய் அறிந்து வழங்கல் இனிது
- தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
- விடமென்று உணர்த்தல் இனிது
திருக்குறள்
திருக்குறளின் விளக்கம்:
- ஆசிரியர் = திருவள்ளுவர்
- பாவகை = குறள் வெண்பா
பெயர்க்காரணம்:
- திரு + குறள் = திருக்குறள்
- குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
- திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
திருக்குறளின் சிறப்பு கூறுபவை:
திருக்குறளின் முன்னோடி எனப்படுவது
|
புறநானூறு
|
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது
|
நாலடியார்(சமண முனிவர்கள்)
|
திருக்குறளின் பெருமையை கூறுவது
|
திருவள்ளுவ மாலை
|
திருக்குறளின் சாரம் எனப்படுவது
|
நீதிநெறிவிளக்கம்(குமரகுருபரர்)
|
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது
|
திருவருட்பயன்(உமாபதி சிவம்)
|
திருக்குறளின் வேறு பெயர்கள்:
- திருவள்ளுவம்
- தமிழ் மறை
- பொதுமறை
- முப்பால்
- பொய்யாமொழி
- தெய்வநூல்
- வாயுறைவாழ்த்து
- உத்தரவேதம்
- திருவள்ளுவப் பயன்(நச்சினார்க்கினியர்)
- தமிழ் மாதின் இனிய உயர் நிலை
- அறஇலக்கியம்
- அறிவியல் இலக்கியம்
- குறிக்கோள் இலக்கியம்
- நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
- நாயனார்
- தேவர்(நச்சினார்க்கினியர்)
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
- நான்முகன்
- மாதானுபாங்கி
- செந்நாப்போதார்
- பெருநாவலர்
- பொய்யில் புலவன்
திருவள்ளுவரின் காலம்:
- கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
- கி.மு.31 = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
- கி.மு.1-3 = இராசமாணிக்கனார்
நூல் பகுப்பு முறை:
- பால் = 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
- அதிகாரம் = 133
- மொதப்பாடல்கள் = 1330
- இயல்கள் = 9
அறத்துப்பால்:
- அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும் உடையது.
- பாயிரவியல் = 4 அதிகாரங்கள்
- இல்லறவியல் = 20 அதிகாரங்கள்
- துறவறவியல் = 13 அதிகாரங்கள்
- ஊழியல் = 1 அதிகாரங்கள்
பொருட்பால்:
- பொருட்பாலில் 70 அதிகாரங்களையும் 3 இயல்களையும் உள்ளது.
- அரசியல் = 25 அதிகாரங்கள்
- அங்கவியல் = 32 அதிகாரங்கள்
- குடியியல் = 13 அதிகாரங்கள்
இன்பத்துப்பால்:
- இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும் உடையது.
- களவியல் = 7 அதிகாரங்கள்
- கற்பியல் = 18 அதிகாரங்கள்
திருக்குறளின் உரைகள்:
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
தருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமே லழகர், - திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர்வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர்
|
- திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் = தருமர்
- திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்
- மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.
பொதுவான குறிப்புகள்:
- திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.
- சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையைகூறுகின்றன.
- திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்து தஞ்சையில்வெளியிட்டார்.
- தை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்
- தமிழிற்கு “கதி” எனப்படுவது = க – கம்பராமாயணம், தி – திருக்குறள்
- திருக்குறளில் 12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ அவை 0.4%ஆகும்.
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு;
- இலத்தின் = வீரமாமுனிவர்
- ஜெர்மன் = கிரால்
- ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
- பிரெஞ்ச் = ஏரியல்
- வடமொழி =அப்பாதீட்சிதர்
- இந்தி = பி.டி.ஜெயின்
- தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை
சிறப்பு:
- பாரதியார் வள்ளுவரை பாராட்டுதல்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு
|
- பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும்பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.
- மனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி
|
சுத்தானந்தபாரதி கூறுவது
எம்மதம் எவ்வினமும் எந்நாளும் சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்
|
திரு.வி.க கூற்று:
- திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒருநாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.
கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூற்று:
- திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குதெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்குதெரிந்திருக்காது.
முக்கிய அடிகள்:
- அறத்தான் வருவதே இன்பம்
- மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
- திருவேறு தெள்ளியராதலும் வேறு
- பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
- ஊழிற் பெருவழி யாவுள
- முயற்சி திருவினை யாக்கும்
- இடுக்கண் வருங்கால் நகுக
- கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
- ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
திரிகடுகம்
திரிகடுகத்தின் உருவம்:
- ஆசிரியர் = நல்லாதானர்
- பாடல்கள் = 100 + 1
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ளஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
- திரி = மூன்று
- கடுகம் = காரமுள்ள பொருள்
ஆசிரியர் குறிப்பு:
- இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
- “செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது
பொதுவான குறிப்புகள்:
- “திரிகடுகம்=சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது
- இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
- இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
- இந்நூலில் 66 பாடகளில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
- இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.
- கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.
- 300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய அடிகள்:
- நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
- வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
- தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்
- நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்
- நட்பின் கொழுநனை பொய் வழங்கின் இல்லாகும்
- கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி
ஆசாரக்கோவை
ஆசாரக்கோவையின் உருவம்:
- ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
- பாடல்கள் = 100
- பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்
பெயர்க்காரணம்:
- கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
- நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
- எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.
பொதுவான குறிப்புகள்:
- ஆசாரம் = ஒழுக்கம், கோவை = தொகுப்பு
- வட நூல்களான “சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
- ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
- பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
- “கயத்தார் பெருவாயின் முள்ளியார்” என அழைக்கப்படுபவர்.
- இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
மேற்கோள்:
- விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
- இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும் ஒழுக்கம் பிழையா தவர்
- பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
- பகற்பொய்யார் தீயினுள் நீர்
- உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
- வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும் புணரார் பெரியார் அகத்து
பழமொழி நானூறு
பழமொழி நானூறின் உருவம்:
- ஆசிரியர் = முன்றுறை அரையனார்
- பாடல்கள் = 400
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதிசுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
வேறு பெயர்கள்:
- பழமொழி
- உலக வசனம்
ஆசிரியர் குறிப்பு:
- முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
நூல் பகுப்பு முறை:
- இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
- பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
- பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
- பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
- பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
- பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)
பொதுவான குறிப்புகள்:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
- தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
- பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
- இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே
மேற்கோள்:
- அணியெல்லாம் ஆடையின் பின்
- கடன் கொண்டும் செய்வார் கடன்
- கற்றலின் கேட்டலே நன்று
- குன்றின்மேல் இட்ட விளக்கு
- தனிமரம் காடாதல் இல்
- திங்களை நாய்க் குரைத் தற்று
- நுணலும் தன் வாயால் கெடும்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலத்தின் உருவம்:
- ஆசிரியர் = காரியாசான்
- பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின்நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
பொதுவான குறிப்புகள்;
- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
- பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
- ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை1.வில்வம்,2.பெருங்குமிழ்,3.பாதிரி,4.தழுதாழை,5.வாகை
- காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒருசாலை மாணவர்கள்.
- இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
மேற்கோள்:
- நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு
- பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு
முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சியின் உருவம்:
- ஆசிரியர் = மதுரைக் கூடலூர்க்கிழார்
- பாடல்கள் = 100
- பாவகை = குறள் தாழிசை
பெயர்க்காரணம்;
- முதுமொழி = மூத்தோர் சொல், காஞ்சி = மகளிர் இடையணி
- மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
வேறு பெயர்:
- அறவுரைக்கோவை
- ஆத்திச்சூடியின் முன்னோடி
பொதுவான குறிப்புகள்:
- பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
- சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்யாப்பத்து, எளியபத்து, நல்கூர்ந் பத்து, தாண்டாப்பத்து
- ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
- இதன் பாடல்கள் குறள்வெண் செந்துறை என்ற யப்பால் ஆனவை.
மேற்கோள்:
- ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
- ஓதலிற் சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை
- வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
- மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
- ஈரம் உடைமை ஈகையின் அறிப
ஏலாதி
ஏலாதியின் உருவம்:
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயைதீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்குஉறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள்:
- இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
- நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்
மேற்கோள்:
- தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார் கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார் வைத்து வழங்கிவாழ் வார்
- சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது மேவல் எளிது; அரிது மெய்போற்றல்
கைந்நிலை
கைந்நிலையின் உருவம்:
- ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
- பாடல்கள் = 60(5*12=60)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
- தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
- வடசொல் கலப்பு மிகுந்த நூல்
- ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
மேற்கோள்:
- ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
- குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப் பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து நாணும் தகையளாம் பெண்
கார் நாற்பது
கார் நாற்பதின் உருவம்:
- ஆசிரியர் = மதுரைக் கன்னங் கூத்தனார்
- பாடல்கள் = 40(அகநூல்களில் அளவில் சிறியது)
- திணை = அகத்திணை – முல்லைத்திணை
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- கார் = கார் காலம், மழைக்காலம்
பொதுவான குறிப்புகள்:
- கார் நாற்பது நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை.
- அகப்பொருள் கூறும் நூல்களுள் மிகவும் சிறியது.
- ஆசிரியரின் இயற்பெயர் = கூத்தன்
- இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர் என்பர்.
- சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
- நூலில் கூறப்படும் துறை = வினைமேற் சென்று திரும்பும் தலைவன் பாகனோடு பேசி விரைந்து வருதல்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை(முல்லை) மட்டும் பாடிய நூல்.
- நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் இந்நூலில் மேற்கோள் சான்று காட்டியுள்ளார்.
முக்கிய அடிகள்:
- செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார் மேனிபோல் புல்என்ற காடு
- தூதோடு வந்த மழை
- பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி
- வாடும் பசலை மருந்து
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை ஐம்பதின் உருவம்:
- ஆசிரியர் = மாறன் பொறையனார்
- பாடல்கள் = 50(5 X 10 = 50)
- திணை = ஐந்து அகத்திணை
- திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப்பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
- இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது.
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்
|
- நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
- தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
முக்கிய அடிகள்:
- வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்
- தண்சுடர் அன்னாளைத் தான்
- சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
- பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
- கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்
- உள்ளம் படர்ந்த நெறி
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபதின் உருவம்:
- ஆசிரியர் = மூவாதியார்
- பாடல்கள் = 70(5*14=70)
- திணை = ஐந்து அகத்தினணகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
- பாவகை = வெண்பா
பொதுவான குறிப்புகள்:
- தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
- மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
- திணைக்கு பதினான்கு பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன.
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.
- இந்நூலில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை(முல்லையில் இரண்டு, நெய்தலில் இரண்டு)
முக்கிய அடிகள்:
- நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு
- நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
- இன்னுயிர் தாங்கும் மருந்து
- செங்கதிர் செல்வன் சினங்காத்த போழ்தினாற்
- பைங்கொடி முல்லை மனங்கமழ வண்டிமிர்
- காரோடலமருங் கார்வானங் காண்டோறும்
- நீரோடலம் வருங் கண்
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பதின் உருவம்:
- ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார்
- பாடல்கள் = 50(5*10=50)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
- இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
- 4 பாடல்கள் நேரிசை வெண்பா ஆகும்
- குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
- சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார் சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் எனஉ.வே.சா கூறுகிறார்.
நூலின் சிறப்பு:
- நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
- நச்சினார்கினியரரால் இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
முக்கிய அடிகள்:
- அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
- தெரிவார்யார் தேடும் இடத்து
- துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
- தணியும் என்தோள் வளை
திணைமாலை நூற்றைமப்து
திணைமாலை நூற்றைம்பதின் உருவம்:
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = 150(5*30=150)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப்பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல்,மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
- இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
- இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
- ஒவ்வொரு தினைக்கும் முப்பது பாடல்கள் வீதும் நூற்றைம்பது பாடல்கள் உடையது.
- பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
- இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும்காணமுடிகிறது.
- நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
- மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை
முக்கிய அடிகள்:
- ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
- இருகடரும் போந்தன என்றார்
- பொருள் பொருள் என்றால் சொல்
- பொன்போலப் போற்றி
- அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
- வளமை கொணரும் வகையினால் மற்றோர்
- இளமை கொணர இசை
- நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
- கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு என்னையோ? நாளை எளிது
ஏலாதி
ஏலாதியின் உருவம்:
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயைதீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்குஉறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள்:
- இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
- நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்
மேற்கோள்:
- தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார் கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார் வைத்து வழங்கிவாழ் வார்
- சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது மேவல் எளிது; அரிது மெய்போற்றல்
கைந்நிலை
கைந்நிலையின் உருவம்:
- ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
- பாடல்கள் = 60(5*12=60)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
- தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
- வடசொல் கலப்பு மிகுந்த நூல்
- ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
மேற்கோள்:
- ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
- குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப் பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து நாணும் தகையளாம் பெண்
களவழி நாற்பது
களவழி நாற்பதின் உருவம்:
- ஆசிரியர் = பொய்கையார்
- பாடல் = 40
- திணை = புறத்திணை – வாகைத்திணை
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- களம் = போர்க்களம்.
- போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
- இதனை தொல்காப்பியம்,
ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோன்றிய வென்றியும்
- தொல்காப்பியம் |
வேறு பெயர்:
- பரணி நூலின் தோற்றுவாய்
பொதுவான குறிப்புகள்:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
- சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் = போர்ப்புறம்(கழுமலம்)
- சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் = குடவாயில் கோட்டம்
- சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
- நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம் தெரிவித்தான்.
- ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி உயிர் விட்டான்.
- சேரமான் புறநானூற்றில் பாடிய பாடல்,
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன்று என்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத் தாம்இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகத் தானே
|
- இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
- களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும்வனப்பு வகையை சேர்ந்தது.
முக்கிய அடிகள்:
- கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு
- வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்
- கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
- சினமால் பொறுத்த களத்து
ஏலாதி
ஏலாதியின் உருவம்:
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயைதீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்குஉறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள்:
- இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
- நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்
மேற்கோள்:
- தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார் கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார் வைத்து வழங்கிவாழ் வார்
- சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது மேவல் எளிது; அரிது மெய்போற்றல்
கைந்நிலை
கைந்நிலையின் உருவம்:
- ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
- பாடல்கள் = 60(5*12=60)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
- தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
- வடசொல் கலப்பு மிகுந்த நூல்
- ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
மேற்கோள்:
- ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
- குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப் பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து நாணும் தகையளாம் பெண்
thank u sir aimperum kapiyam ainsirukaapiyam podunga
ReplyDelete